Friday, May 20, 2011

The India

Proud to be INDIAN
plz respect our anthem

Wednesday, April 28, 2010

ஒற்றுமை

ஒற்றுமை 
ஒன்றென்று சொல்லிடுவாய் சிவசக்தி
செந்நிற ஓட்டத்தினால்                   
                               படும் பாட்டத்தினால் 
ஒன்றென்று சொல்லிடுவாய் சிவசக்தி 
நன்றென்று சொல்லிடுவாய் சிவசக்தி 
 வேற்றுமை அழிவுண்டு                   
                       ஒற்றுமை பலம் கண்டு 
       வாழ்ந்திருந்தால் அது   
நன்றென்று சொல்லிடுவாய் சிவசக்தி

Monday, April 26, 2010

தமிழ்க்கவிஞன்

 தமிழ்க்கவிஞன் 
உன் காதலனாய் நானிருத்தல் வேண்டும் இல்லை 
உன் சேவகனாய்  வாழ்ந்திருத்தல் வேண்டும் -தமிழே 
என் சித்தத்தில் உன் அழகை கண்டிருக்கிறேன் 
நான் மொத்தத்தில் உன்னிலே நின்றிருக்கிறேன் 
சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய் 
நாடுகள் நலம் பெற விதைத்துவிட்டாய் 
நாட்டுக்கு நான் வாழ விரும்பவில்லை 
தமிழ் பாட்டுக்கு தான் வாழ விரும்புகிறேன்
ஆசி அளிப்பாயாக ;

கண்ணம்மா

 கண்ணம்மா 
காணும் கருமையல்லாம் கண்ணம்மா 
உன் கருங்கூந்தல் தெரியுதடி 
பார்க்கும் இடங்களெல்லாம் கண்ணம்மா 
உன் பார்வை தோன்றுதடி 
காணும் காட்சியல்லாம் கண்ணம்மா 
உன் உருவம் மட்டுமடி 
பேசும் வார்த்தை எல்லாம் கண்ணம்மா 
கவிதையாய் மாறுதடி 
என்னை கவிஞனாக்குதடி

வாழ்க்கை

 வாழ்க்கை 
கருவறை புழுக்கத்தால் 
காற்றாட வந்தவர் நாம் 
கடைசியில் போகும்போது 
காற்றிழந்து போகின்றோம் 
வையகம் வந்தோம் 
வாழ்க்கையை வெல்ல 
கானகம் சென்றோம் 
கலியுகம் என்றோம்

Monday, April 19, 2010

காதல்

காதல்

காக்கைச்சிறகினிலே காதல் உரைத்தேன்
காக்கை காதலி யாரென கேட்டது
கனம் நொடி யோசித்தேன்
கணம் கொண்டு மனம் வலித்தது
காதலி தான் எனக்கில்லை நீயனக்
குரைப்பாயா என்றேன்
நீல வண்ணம் கொண்ட நீளமான
வானத்தை காதல் செய் என்றது
அவளுக்குத்தான் எல்லையே இல்லை
அவளை தேடினால் ஏன் தேடலுக்கு முடிவில்லை
மண்ணிலே உயர்ந்த உயர்
சிகரத்தை காதல் செய் என்றது
நான் அவளோடு உரையாடினால் ஏனோ
அவள் மௌனம் கொள்கிறாள்
பச்சை தனை உடலை கொண்ட
பசுந்தாவரத்தை காதல் செய் என்றது
அவள் மட்டும் பேசிடுவாளா
உடலில் பசுமையும் பேச்சில் வறுமையும் கொண்டவள்
-அப்படியானால்
உன்னை காதலிக்கும் பெண்ணைத்
தேடி காதல் செய்
என்னையும் ஒரு பெண் காதலித்தால் ஏனோ
எந்தை வேண்டாம் என்கிறார் என்று சொல்லி பிரிந்துவிட்டால்



நீங்களே சொல்லுங்கள் நான் யாரை காதலிப்பேன்


விக்னபாரதி