Monday, April 19, 2010

காதல்

காதல்

காக்கைச்சிறகினிலே காதல் உரைத்தேன்
காக்கை காதலி யாரென கேட்டது
கனம் நொடி யோசித்தேன்
கணம் கொண்டு மனம் வலித்தது
காதலி தான் எனக்கில்லை நீயனக்
குரைப்பாயா என்றேன்
நீல வண்ணம் கொண்ட நீளமான
வானத்தை காதல் செய் என்றது
அவளுக்குத்தான் எல்லையே இல்லை
அவளை தேடினால் ஏன் தேடலுக்கு முடிவில்லை
மண்ணிலே உயர்ந்த உயர்
சிகரத்தை காதல் செய் என்றது
நான் அவளோடு உரையாடினால் ஏனோ
அவள் மௌனம் கொள்கிறாள்
பச்சை தனை உடலை கொண்ட
பசுந்தாவரத்தை காதல் செய் என்றது
அவள் மட்டும் பேசிடுவாளா
உடலில் பசுமையும் பேச்சில் வறுமையும் கொண்டவள்
-அப்படியானால்
உன்னை காதலிக்கும் பெண்ணைத்
தேடி காதல் செய்
என்னையும் ஒரு பெண் காதலித்தால் ஏனோ
எந்தை வேண்டாம் என்கிறார் என்று சொல்லி பிரிந்துவிட்டால்



நீங்களே சொல்லுங்கள் நான் யாரை காதலிப்பேன்


விக்னபாரதி

2 comments:

Unknown said...

It's really good.You have a great future. I support you.All the very BEST.

Unknown said...

i love youuuuuuuuuuuu
it's really nice