Monday, April 26, 2010

தமிழ்க்கவிஞன்

 தமிழ்க்கவிஞன் 
உன் காதலனாய் நானிருத்தல் வேண்டும் இல்லை 
உன் சேவகனாய்  வாழ்ந்திருத்தல் வேண்டும் -தமிழே 
என் சித்தத்தில் உன் அழகை கண்டிருக்கிறேன் 
நான் மொத்தத்தில் உன்னிலே நின்றிருக்கிறேன் 
சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய் 
நாடுகள் நலம் பெற விதைத்துவிட்டாய் 
நாட்டுக்கு நான் வாழ விரும்பவில்லை 
தமிழ் பாட்டுக்கு தான் வாழ விரும்புகிறேன்
ஆசி அளிப்பாயாக ;

No comments: